சனி, 5 ஏப்ரல், 2014

புரோகோலி புசியுங்கள்

புரோகோலி தெரியுமா ? பரவலாக பலரும் பயன்படுத்தாத இந்த காய்கறிக்கு வயிற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தினமும் இரண்டு கைப்பிடி அளவு தளிர் புரோகோலியைச் சாப்பிட்டு வந்தால் உடலில் என்சைம்கள் அதிகமாய் சுரந்து அவை வயிற்றில் கான்சர் வரும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது என்பதே இவர்களுடைய புதிய ஆராய்ச்சி முடிவாகும்.
ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் சுருங்கிய விளக்கம் வேண்டுமெனில் , “புரோகோலியில் உள்ள பயோ கெமிக்கல் பொருளான சல்ஃபோரோபேன் தான் இந்த பாதுகாப்புப் போரைப் புரிகிறது” எனச் சொல்லலாம்.
புரோகோலியை தினமும் உண்பது உடலிலுள்ள வாயு தொல்லைகளுக்கான நிரந்தரத் தீர்வாகி விடுகிறது. கூடவே வயிற்றில் கான்சர் வராமல் தடுக்கும் மாபெரும் பணியையும் செய்கிறது என்கிறார் ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெட் பாகே.
புரோகோலியில் வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உடல் நலத்துக்கு மிகவும் பயனளிப்பது. குறிப்பாக உடலின் குருதி அழுத்தத்தை இது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இதிலுள்ள வைட்டமின் C, தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது. கண்ணில் பூவிழுதல் (காட்டராக்) தொல்லையிலிருந்து கண்ணைக் காப்பாற்றவும் இந்த புரோகோலி துணை செய்கிறது.
இதிலுள்ள ஃபோலிக் அமிலம் தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். கூடவே வயதான பெண்களுக்கு வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோயிலிருந்தும் புரோகோலி பாதுகாக்கிறது.
அல்ஸீமர், நீரிழிவு, இதய நோய் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றும் சக்தி இந்த புரோகோலிக்கு உண்டு ! இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமை கூட உண்டு என்பது கூடுதல் தகவல்.
இன்னும் என்ன தயக்கம், புரோகோலி புசிக்க ஆரம்பிக்கலாமே

ஞாயிறு, 23 மார்ச், 2014

உடம்புல ஸ்ட்ரெட்ச் மார்க் அதிகமா இருக்கா? அதை போக்க சில டிப்ஸ்...

உடலின் வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்ற கோடுகள் காணப்படும். அது தான் ஸ்ட்ரெட்ச் மார்க். இந்த தழும்புகள் பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். அதே நிலை தான் குண்டாகி, ஒல்லியானவர்களுக்கும். இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஏனெனில் அனைவருக்குமே அந்த வகையான கெமிக்கல் கலந்த செயற்கைப் பொருட்கள் சரியான பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் அந்த மாதிரியான தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, செய்து பாருங்களேன்...
உடற்பயிற்சி
 
 உடற்பயிற்சியை வைத்தே ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் சருமத்திற்கு சரியான ஒருவித பயிற்சியை கொடுப்பதால், அந்த பயிற்சியால், சருமத்தில் இருக்கும் அந்த ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய ஆரம்பிக்கும்.

 
ஆரோக்கிய உணவுகள்
 
உணவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி, ஈ சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் புதிய திசுக்கள் வளர்ச்சியடைவதோடு, பாதிக்கப்பட்ட திசுக்களும் சரியாகும். அதுமட்டுமின்றி ஜிங்க் சத்துள்ள உணவுகளான நட்ஸ் மற்றும் விதைகளையும் சேர்க்க வேண்டும். மேலும் வைட்டமின் கே உள்ள உணவுகளான பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டால், பழுதடைந்த திசுக்கள் குணமடைந்து, தழும்புகள் மறைந்துவிடும்.
கற்றாழை
 
கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள நொதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது.
லாவெண்டர் ஆயில்
 
 ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருள் என்றால், அதில் லாவெண்டர் ஆயிலும் ஒன்று. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும்.
ஆப்ரிக்காட் ஸ்கரப்
 
 ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால், அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து, அதன் நிறத்தை மங்க வைத்து, நாளடைவில் மறைய வைத்துவிடும்.
நறுமணமிக்க எண்ணெய்கள்
 
 அவோகேடோ, பாதாம் மற்றும் ஜோஜோபா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தினால், அவை ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.
கொக்கோ வெண்ணெய்
 
 பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுககலாம். அதையே மார்க்குகள் வந்த பின்பு செய்தால், அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.

ப்ளீஸ்... கலர் பாத்து ‘டூத் பேஸ்ட்’ வாங்குங்க ...

ஆதிகாலத்தில, வேப்பங்குச்சில, ஆலங்குச்சில பல்லு விளக்குன நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் கல்லைய்யும் நறநற மென்னு சாப்பிட்டாங்க. ஆனா, நாம அப்படியா..? காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானவர்கள் முழிப்பது டூத்பேஸ்ட்களின் முகத்தில் தான். அத்தகைய டூத் பேஸ்ட்களை வாங்கும் போது, நிறமிருந்தால் சுவையில்லை, சுவையிருந்தால் மணமில்லை என்ற ரேஞ்சில் வாங்காமல், அதம் உண்மையான பலன்களைத் தெரிந்து கொண்டு வாங்குவது உத்தமம். விளம்பரங்களை மட்டும் பார்த்து விட்டு, அதை அப்படியே கடையில் வாங்கும் அன்பர்களே உங்களுக்காகத் தான் இந்த உபயோகமான செய்தி...
 
 
பட்டையா கலர் கோடு...

 
 
நாம வாங்கற டூத் பேஸ்ட் டுயூப்ல, கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் பாத்திருக்கீங்களா..?
 அந்தக் கோடுகள். பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் தான் இருக்கும் ..
அர்த்தம் என்னன்னா... அந்த கலர்களின் அர்த்தமாகப்பட்டது...
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை
 
கரெக்டா செலக்ட் பண்ணுங்க... இனிமேலாவது, டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். பெரும்பாலும், ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
 
உங்களப் பத்தி தெரியும் பாஸூ.... உடனே குடு குடுன்னு ஓடி போய் , டூத் பேஸ்ட் எடுத்து " color bar " இருக்கானு செக் பண்ணுவிங்க இல்லாட்டி போன் பண்ணி வீட்ல இருக்கறவங்க கிட்ட செக் பண்ண சொல்லுவீங்களே ..!!! ஹி ஹி ஹீ ...எங்களுக்குத் தெரியாதா?
 
 

புதன், 5 மார்ச், 2014

அகத்தி பூ


அகத்திப் பூவின் இதழ்களைக் எடுத்துக்கொண்டு அத்துடன் பாசிப்பயிறு சேர்த்துக் கூட்டாகச் செய்து இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் தொடர்பான நோய்கள் அகன்று இருதயம் பலப்படும்

 

இப்பூவுலகெங்கும் மரம், செடி, கொடி, சமுத்திரம், மலை, பறவைகள், மனித இனம், விலங்குகள்
மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுத் தோட்டங்கள், பூஞ்சோலைகள், பூங்காவனங்கள் என்பவற்றில் கோடானு கோடி பூக்கள் தினமும் மலர்வதை அவதானிக்கலாம். இதனாலன்றோ ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று இயற்கையைப் போற்றினர் நமது முன்னோர்கள்.அதேவேளை ‘எத்தனை கோடி பூமலரும்’ என்றார் கவிஞர் கண்ணதாஸன். மேலும் எமது பண்டைய இலக்கியம்கூட பெண்களை மலருக்கு ஒப்பிடுவதைக் கண்டோம். மங்கையரின் கூந்தலை அலங்காரம் செய்வதில் மலர்கள் பிரதான பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம்.
என்பன இயற்கையில் பரிணமித்துள்ளன. இவைகள் அனைத்தையும் விட மிகவும் அழகான தோற்றத்தை தன்னகத்தே கொண்டுள்ளவைதான் மலர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்களின் நிறம், அதன் மருத்துவ குணம், சுகந்தம், கவர்ச்சியான தோற்றம் என்பன இவ்வுலகில் உள்ளோரை பிரமிக்க வைக்கின்றன என்பது நிதர்சனமாகும்.
பூக்கள் நமக்கு இயற்கை நல்கிய கொடை, அவைகளில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள், பல்வேறுபட்ட வடிவங்கள், விதம் விதமான நறுமணங்கள், மருத்துவ குணங்கள் என்று அதன் தாற்பரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.கண்ணுக்கு கவர்ச்சியாகவும், மனதுக்கு சாந்தியையும், கிளர்ச்சியையும் நல்குவது பூக்கள்தான் என்பது வெள்ளிடைமலை. மலர்கள் புனிதமானவை. இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடியது. மணமக்கள் கழுத்தில் மாலையாகப் பொலிவது மலர்கள் தான் என்பதையும் நாம்அறிவோம். மகரந்தங்களால் இனிக்கும் தேனை வழங்கிவருவதும் பூக்களே.
பல்வேறு சிறப்பு மிக்க அத்தகைய மலர்கள் மனித குலத்திற்கு பிணி நீக்கும் ஒளடதமாகவும் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சித்த மருத்துவ நூலை புரட்டிப் பார்த்தோமாகில் பல்வேறு வகையான மலர்களின் மருத்துவ குணங்களை சிறப்புறக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. இன்றுகூட தென் இந்திய கிராமங்கள் சிலவற்றில் நோய்களுக்கு பூக்களை மருந்தாகப் பயன்படுத்தி எளிய முறையில் சிகிச்சை பெறுகின்றனர். இது செலவில்லா சுலப மருத்துவம் என்பது கண்கூடு.
பலகோடி மலர்கள் உலகில் உள்ளன என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். இருப்பினும் நமது அனுபவம் மற்றும் பழக்கத்தில் உள்ள மலர்களின் மருத்துவ குணம் பற்றி அறிந்து கொள்வது இங்கு உசிதமாகும்.முதலில் நாம் தெரிவு செய்வது மருதோன்றிப் பூவாகும். மருதாணி என்ற சிறிய செடியில் கிடைப்பது மருதோன்றிப்பூ. இந்த மருதாணி இலையை மங்கையர் தங்கள் அழகிற்காக கால்களிலும், கைகளிலும், அரைத்துப் பூசுவார்கள்.
இது வண்ண வண்ண அழகையும் குளிர்ச்சியையும் தருகின்றது. மருதாணி மரத்தில் மலரும் பூக்கள் மருதோன்றிப் பூக்களாகும். இந்தப் பூக்கள் மருத்துவ தன்மை வாய்ந்தவை. மருதாணி இலைக்கு உள்ளதைப் போன்று பூக்களுக்கும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை உண்டு.மருதோன்றிப் பூவைப் படுக்கைக்கு செல்லுமுன் தலையில் வைத்துக் கொண்டால் அல்லது தலைக்கு அடியில் வைத்துக் கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும். குடும்பக் கவலை, தீர்க்க முடியாத பிரச்சினை, மன அலைச்சல் உள்ளவர்கள் மற்றும் ஹிஸ் யரியர் நோய் உள்ள மங்கையர் இந்தப் பூவை தலையில் சூடிக் கொணடால் நோய் அகன்றுவிடும்.
சில பெண்களுக்கு மருதோன்றிப் பூவின் மணம் பிடிப்பதில்லை. ஆகவே அவர்கள் இம்மலரைக் காய வைத்தபின் உபயோகிக்கலாம். காய வைத்த மருதோன்றிப் பூவுடன் எலுமிச்சைப் பழச் சாறு சேர்த்து தலையில் தேய்த்து ஸ்நானம் செய்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் தலையில் உள்ள பொடுகு போய்விடும்.மற்ற மலர்களைவிட மிகவும் மாறுபட்ட நறுமணத்தைக் கொண்டது மருதோன்றிப் பூ. அடுத்து கமகமவென்று நறுமணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூவைப் பார்ப்போம். மல்லிகைப் பூவை விரும்பி வைக்காத பெண்களே இல்லையெனலாம். மல்லிகையிலும் பல ரகங்கள் உள்ளன.
அவற்றை அடுக்குமல்லி, ஒற்றை மல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி, நித்திய மல்லி, காட்டுமல்லி என வகுக்கலாம். மல்லிகைப் பூவிலும் சில மருத்துவ குணம் இருப்பது பலருக்குத் தெரியாது. மல்லிகைப்பூ தலைவலியைப் போக்கும் தன்மை கொண்டது. சில பெண்களுக்கு மல்லிகையின் மணம் பிடிக்காது.
அதனை ஒவ்வாமையென்று கூறலாம். மல்லிகை மலர்கள் களைப்பைப் போக்கும் அதேவேளை மோக இச்சையையும் அதிகரிக்கும் வல்லமை கொண்டது. இதனாலன்றோ திருமணம் நடந்து முதல் இரவு அன்று கட்டிலில் மல்லிகை மலர்களைப் பரப்புவதோடு கட்டிலைச் சுற்றி மல்லிகைப் பூக்களைக் கொண்டு அலங்காரமும் மேற்கொள்கின்றனர்.
குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியினர் தொடர்ந்து மல்லிகைத் தோட்டத்தில் உலாவினால் நல்ல பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. மல்லிகைப் பூவின் மணத்தை ‘காதல் மணம்’ என்று கூடச் கூறுவர். மன்மதன் – ரதி ஆகியோர் மல்லிகைத் தோட்டத்தில் தான் வசித்தார்களென்று புராணங்கள் கூறுகின்றன. மல்லிகைப் பூ தைலம் எடுக்கப்பட்டு வாசனைத் திரவியங்களில் கலந்து பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.
இனி எல்லோரும் விரும்பும் ரோஜா மலரின் தாற்பாரியங்கள் சிலவற்றை நோக்குவோம். பொதுவாக இதனை மலர்களின் ராஜா என்றும் அழைப்பதுண்டு. மனதுக்கு இதமான பலவித வர்ணங்களில் காட்சி தருகின்ற ரோஜாப் பூவைப் பறிப்பதற்கு கூடிய கவனம் செலுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் ரோஜாச் செடியில் அதிக அளவில் முட்கள் காணப்படுவதேயாகும்.
ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப்படுகின்றது.ரோஜாப் பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம்.
இதனைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும், அத்துடன் அழகான உடல் அமைப்பையும் பெறலாம். அத்துடன் குருதி சுத்தமடைந்து தோலின் நிறம் பளபளப்புடன் விளங்கும். ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம். இதை அருந்தினால் மூலச்சூடுஇ மலச்சிக்கல் குடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும். வாயிலுள்ள துர்நாற்றத்தை ரோஜா இதழ்கள் போக்கும் தன்மையுடையது.
பொதுவாக தாம்பூலம் தரிக்கும் பொழுது அத்துடன் இரண்டு அல்லது மூன்று ரோஜா இதழ்களை சேர்த்துக் கொள்வது நல்லது. அது ஜீரணத்தைப் போக்கும். வீட்டு முற்றத்தில் ரோஜா செடிகளை வளர்ப்பது உத்தமம். அவற்றைப் பதியம் போட்டு பூச்சாடிகளிலும் உண்டு பண்ணலாம். அடுத்ததாக நாம் பவள மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்வோம். பவள மல்லிகைச்செடி மரம் வகையைச் சேர்ந்தது.
இதனை வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கோடையில் பூத்துக் குலுங்கும் இந்தமலரை ‘பாரிஜ மலர்’ என்றும் கூறுவர். ‘பாரிஜம்’ என்ற பதம் சமஸ்கிரதச் சொல்லாகும். இந்தப் பூ சுகந்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதன் வாசனை அலாதியானது. இந்தப் பூ மிகச் சிறிதாக இருக்கும். இவை இந்திரனின் தோட்டத்தில் காணப்பட்டன என்று ‘அமர கோசம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
இனி பவள மல்லிகைப் பூ பற்றிப் பார்ப்போம். இதனை கண் சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் இந்தப் பவள மல்லிகை மரங்கள் அதிகமாக இருக்கும். இதன் வாசனை ஞானத்தை அளிக்கக் கூடியது. அத்துடன் இந்த மரத்தின் கீழேதான் வாயுபுத்திரன் தவம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் ஆஞ்சநேயர் சன்னதியில் பவள மல்லிகை மரம் வளர்க்கப்படுகிறது.
அடுத்து நாம் இலுப்பைப் பூவைப் பற்றி சிறிது ஆராய்வோம். இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூ இலுப்பைப் பூ ஆகும். இந்தப் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.
ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
இனி தூதுவளைப் பூ பற்றிப் பார்ப்போம். தூதுவளைப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு குணம் அடையும்.தூதுவளைப் பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. வீட்டு வேலைகளில் எல்லோரும் தூதுவளைக் கொடியை வளர்க்க வேண்டும். தூதுவளை இலை, பூ இவைகளுக்கு நல்ல விலை கிடைக்கின்றது. குறிப்பாகச் சித்த மருத்துவத்திலும், ஆயுர் வேதம், யூனானி முறைகளில் பெரும் அளவு இது பயன்படுகிறது.
அடுத்ததாக நீர்த்தாவரங்களில் காணப்படும் தாமரைப் பூவைப் பற்றி சிறிது பார்ப்போம். தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் இருக்கும்.
தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும். உடல் உஷ்ணம் குறையும்.
அடுத்து முருங்கைப்பூ பற்றிப் பார்ப்போம். முருங்கைப் பூவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முருங்கைப்பூ தாது பலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. பசும் பாலை நன்றாகக் காய்ச்சி அதில் முருங்கைப் பூவைப் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும். ஆண்மை சக்திக்கு அதிகமாக முருங்கைக் கீரை, முருங்கைப் பூ இவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர்.
முருங்கை மரத்தை மிகச் சுலபமாக தோட்டத்திலும் வீட்டிலும் வளர்க்கலாம். கிளைகளை வெட்டி வைத்தால் சுலபமாக வளர்ந்து பலன் தரும்.வீட்டிற்கு ஒரு வைத்தியர் என்று முருங்கை மரத்தைக் குறிப்பிடலாம். ஆகவே எமது இல்லத்தில் ஒரு முருங்கை மரம் வளர்ப்பது மிகவும் நல்லது.இனி வேப்பம் பூவைப் பற்றி ஆராய்வோம். வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் இந்தப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. வேப்பம் பூ உதிரும் காலத்தில் பூக்களை சுத்தமாக பாய்இ தடுக்குஇ தட்டி இப்படி எதிலாவது சேகரிக்க வேண்டும். வேப்பம் பூவை துவையலாகவோ பொடி செய்தோஇ சர்பத் போல் தயாரித்தோ அல்லது பச்சையாகவோ பயன்படுத்தலாம்.
வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் கல், மண் என்பவற்றை தெரியாத்தனமாக உண்ணும் குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். இதை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வேப்பம் பூவிற்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. அத்துடன் உடலின் உஷ்ணத்தையும் கூட்டும் வல்லமையுள்ளது. வேப்பம் பூ குடலிலுள்ள பூச்சிகளை கொல்லும் மருத்துவ குணம் கொண்டது.வேப்ப மரம் மிகப்பெரிய மருத்துவ குணம் நிறைந்தது. இதன் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர் பூ அனைத்தும் மிகப் பயனுள்ளவை.
அடுத்ததாக மகிழம் பூவைப் பார்ப்போம். மகிழம் பூவின் நறுமணம் மற்றப் பூக்களைவிட சற்று வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.இனி அகத்திப் பூவைப் பார்ப்போம். அகத்தி மரத்தில் கிடைக்கும் பூவையே அகத்திப் பூ என்கிறோம். அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு.
அடுத்ததாக தொட்டாச் சிணுங்கிப் பூவைப் பற்றி சிறிது ஆராய்வோம். தொட்டாச் சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும்.தொட்டாச்சிணுங்கி வேர் என்பவற்றிற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களது கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இனி எருக்கம் பூவைப் பற்றி சிறிது நோக்குவோம்.
எருக்கம் செடியிலிருந்து கிடைக்கும் இந்தப் பூ மிகச் சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது. இந்தப் பூ உடலில் உண்டாகும் ஆரம்ப நிலையில் உள்ள குஷ்டத்திற்கு மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். அடுத்து அரளிப் பூவைப் பார்ப்போம். இப்பூவும் மருத்துவ இயல்பு கொண்டது.
அரளி விதையும் வேரும் கொடிய விஷத் தன்மை கொண்டது. கிராமங்களில் இதை அரைத்துக் குடித்து தான் தற்கொலை செய்கின்றனர் என்பதையும் காண முடிகின்றது. அதனால்தான் யாரும் வீட்டில் இதனை வளர்ப்பதில்லை. இந்தப் பூவை தலையில் வைத்துக் கொண்டால் தலையில் உள்ள பேன் ஒழியும். இனி தாழம் பூவை எடுத்துக் கொள்வோம். தாழம்பூ மிகவும் நறுமணம் கொண்டது. அம்பாள் பூஜைக்கு உரிய பூ. இதற்கு தனி மரியாதை உண்டு. தாழம்பூ புதர்களுக்குள் சர்ப்பங்கள் வாசம் செய்யும்.
அடுத்து அல்லிப் பூவின் தாற்பரியங்களை நோக்குவோம். அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிரியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.
அடுத்து சூரிய காந்திப் பூவைப் பார்ப்போம். சூரிய காந்திப் பூ மற்ற பூக்களைவிட வித்தியாசமானது. சூரியனைப் பார்த்து இந்தப் பூ முகம் திருப்புவதால் இதற்கு சூரிய காந்திப் பூ எனப் பெயர் ஏற்பட்டது. சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது. இது சூரியகாந்தி விதையிலிருந்து கிடைக்கும். இருதய நோய் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.
இனி வெங்காயப் பூவின் தாற்பரியங்களைப் பார்ப்போம். வெங்காயம் பொதுவாக மருத்துவ குணம் உள்ளது என்பதை நாமறிவோம். வெங்காயத்திலிருந்து வரும் தாள்களில் பூக்கள் தென்படுகின்றன. வெங்காயப் பூக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினி.
வெங்காயம் இல்லாமல் சமையல் சிறப்பதில்லை. இனி குங்குமப் பூவை நோக்குவோம். குங்குமப் பூ மிகவும் விலை உயர்ந்தது. காஷ்மீர் போன்ற குளிர்ப் பிரதேசங்களில் விசேஷமாகப் பயிரிடப்படுகின்றது. குங்குமப் பூவை கார்ப்பமுள்ள பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே காணப்படுகின்றது.
இறுதியாக மருத்துவ குணம் படைத்த ஏனைய பூக்களின் பெயர்களைப் பார்ப்போம். ஆவாரம்பூ, இரவு ராணிப் பூ, பகல் ராணிப் பூ, தென்னம் பூ, மதனகாமப் பூ, கொன்றைப் பூ, பூவரசம்பூ, மாதுளம் பூ, தொட்டாத்திப் பூ, சிறுநாகப் பூ, நொச்சிப்பூ, புளியம்பூ, ஊமத்தம்பூ, வில்வப்பூ, புங்கம் பூ, மாம் பூ, கடுக்காய்பூ, ஆடாதோடைப் பூ, பூசணிப்பூ, செம்பருத்திப் பூ, எள்பூ, பருத்திப் பூ, வெள்ளாம் பல்பூ என்பனவாகும்.
பொதுவாகப் பார்க்கப் போனால் உலகெங்கும் பரிணமித்துள்ள அனைத்துப் பூக்களிலிருந்தும் மருத்துவப் பயன்பாட்டை பெற்றுக் கொள்ளலாம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்

சனி, 2 நவம்பர், 2013

தொப்பையைக் குறைக் கொள்ளு

      25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்:
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போயிவிடும். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம். குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும். அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.
 

வெள்ளி, 1 நவம்பர், 2013

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த  அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான,  உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு  பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல்  இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு  கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக  உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம்,  உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால்  இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம்  கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து  447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு  வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிறது.  தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில்  கண்டுபிடித்துள்ளனர்.

கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன்


              

சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழியை விட ப்ராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், நகர்புறத்தில் எளிதில் கிடைக்கும் என்பதாலும் மக்கள் இதை சாப்பிடுகின்றனர். ஆனால் ப்ராய்லர் கோழியில் உள்ள தீமைகளை பலர் அறிய வாய்ப்பு இல்லை.

பெரும்பாலானோர் கோழியின் இறக்கையைத் (chicken wings) தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சிக்கன் விங்ஸ் உடலில் பல அபாயகரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த கட்டியை நீக்கினாலும் எதிர்காலத்தில் கர்ப்ப பையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். ப்ராய்லர் கோழியானது வெறும் 65 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து விடுகிறது. இதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு ஸ்டெராய்டு (Steroids) என்னும் ஊக்கமருந்தானது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

மேலும் இந்த ஊசியானது கோழியின் கழுத்து மற்றும் இறக்கை பகுதிகளில் செலுத்தப்படுகிறது. ஆதலால் ஸ்டெராய்டு என்னும் ஊக்கமருந்தின் தாக்கம் கழுத்து மற்றும் இறக்கைகளில் அதிகமாக இருக்கும்.

எனவே சிக்கனில் கழுத்து மற்றும் இறக்கையை அதிகம் விரும்பி சாப்பிடுவோருக்கு எளிதில் நோய்களானது தாக்கும். எனவே ப்ராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்த்து நாட்டு கோழி சாப்பிடுவதே நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.